
ஐந்து வருடங்களின் பின்னர்,இஸ்ரேலிய எல்லையின் ஊடாக காஸாவிக்கு கட்டுமானப்பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதிவழங்கியுள்ளது.35சீமெந்து ட்ரக்குகளையும், உருக்குக் கம்பிகளையும் காஸாவிக்குள்கொண்டு செல்வதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் அனுமதிவழங்கியுள்ளனர். இப்பொருட்கள் பலஸ்தீனின் அபூசலீம் கடவையின் ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன.2008ஆம் ஆண்டு காஸா இஸ்ரேலின் ஆக்கிமிப்புக்குஉட்பட்டிருந்தபோது அங்கிருந்த பத்து தொழிற்சலைகள் இஸ்ரேலால் அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன் சர்வதேச தன்னார்வக்குழு நிறுவனம் ஒன்றுக்கு மாத்திரமே காஸாவுக்குள் கட்டுமானப்பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
வியாபார,விவசாய மற்றும் உதவிப்பொருட்களைக் கொண்ட 280ட்ரக் வண்டிகளுக்குஉள்ளே செல்ல இஸ்ரேலிய அதிகாரிகள் அனுமதி வழங்கியதாக,காஸாவுக்குள்பொருட்களை கொண்டுசெல்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அங்கத்தவர் ஒருவர்தெரிவித்தார். காஸாவில் 1.5மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்,மேலும் எகிப்தின் ரபா எல்லையத்தவிர்ந்த,காஸாவின் அடுத்த எல்லைகள் அனைத்தும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment