அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பு செப்டம்பர் 11 நினைவுநாள் இன்று அமெரிக்காவில் பலத்த பாதுகாப்பு மத்தியில் கடைபிடிக்கப்படுகிறது.
ஏறக்குறைய 3 ஆயிரம் பேர் உயிர்களை காவு வாங்கிய அல்கொய்தா தாக்குதலின் 10வது ஆண்டு நினைவு நாள் என்றாலும் ஒசாமா கொல்லப்பட்ட பின்னர் அனுஷ்டிக்கும் நினைவுநாள் என்பதால் இந்த ஆண்டு அமெரிக்கர்கள் மத்தியில் இது முக்கியத்துவம் பெறுகிறது.
செப்டம்பர் 11 நினைவுநாளில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் மக்கள் ஆங்காங்கே தாக்குதலில் மறைந்த நபர்களின் நினைவாக மலரஞ்சலி மற்றும் இறை துதி பாடினர்.
சில இடங்களில் நட்சத்திர அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக பென்டகனில் ஷாங்கஸ்வில்லியில் நிறுவப்பட்டுள்ள நினைவு பார்க்கில் முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், டபுள்யூ ஜார்ஜ் புஷ், லாரா, துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் புஷ் பேசும் போது விமானத்தில் கடத்தி செல்லப்பட்டு உயிரிழந்தவர்கள் இன்றும் மறையவில்லை. இவர்கள் என்றும் நம்மிடையே வாழுபவர்களாக நினைவில் உள்ளனர். இதில் சிக்கி இறந்தவர்கள் அந்நாள் முதலே பயங்கரவாததத்திற்கு எதிரான போரை துவக்கி விட்டனர் என்று புகழாரம் சூட்டினார்.
நினைவு நாளில் அமெரிக்க அதிபர் புஷ் வெளியிட்டுள்ள செய்தி:அமெரிக்கா மீது நடந்த தாக்குதல் அல்ல. இது உலகத்தின் மீது நடந்த தாக்குதல். மனித நேயத்திற்கு எதிராக நடந்த தாக்குதல். இதனை உலக மக்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
காரணம் 90 நாட்டை சேர்ந்த பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் என இழந்தோம். 9/ 11 க்கு பின்னர் அமெரிக்கா பயங்கரவாதிகள் அழிப்பதில் முழு பங்காற்றி வருகிறது. குறிப்பாக ஆப்கனில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இங்கு மக்கள் சுதந்திரமாக வாழ வழி வகை செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாத ஒழிப்பில் உலகளாவிய ஒத்துழைப்பு கருத்தில் கொண்டு அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இவர்களை ஒழிப்பதில் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
பல நாடுகளில் அல்கொய்தாவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்களே. அமெரிக்கா எப்போதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக போரிட்டதில்லை.இவர்களுக்கு எதிராக போரிட போவதும் இல்லை. நாங்கள் அல்கொய்தாவுக்கு எதிராகத்தான் போராடி வருகிறோம்.
நினைவுநாளில் நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என்று கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் வீட்டில் இருந்து கைப்பற்ற ஆவணங்கள் அடிப்படையில் நகர் முழுவதும் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment