Subscribe:

Tuesday, November 22, 2011

காலி பலபிட்டி மகா வித்தியாலயத்தில் ஹிஜாப் அணியத் தடை


 காலி பலபிட்டி ரேவத்த சிங்கள மொழி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு வரக்கூடாது என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் . அந்த பாடசாலையில் 80 வரையான முஸ்லிம் மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு செல்லும் முஸ்லிம் மாணவியர் பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று பாடசாலை நிர்வாகத்தால் அறிவுறித்தப்பட்டடு அந்த மாணவியர் ஹிஜாப் இன்றி பாடசாலை செல்ல நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Friday, November 18, 2011

2006ஆம் ஆண்டுக்குப்பின்னர் முதல்தடவையாக கட்டுமானப்பொருட்களை காஸாவிக்குள் கொண்டுசெல்ல இஸ்ரேல் அனுமதி.


ஐந்து வருடங்களின் பின்னர்,இஸ்ரேலிய எல்லையின் ஊடாக காஸாவிக்கு கட்டுமானப்பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதிவழங்கியுள்ளது.35சீமெந்து ட்ரக்குகளையும், உருக்குக் கம்பிகளையும் காஸாவிக்குள்கொண்டு செல்வதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் அனுமதிவழங்கியுள்ளனர். இப்பொருட்கள் பலஸ்தீனின் அபூசலீம் கடவையின் ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன.2008ஆம் ஆண்டு காஸா இஸ்ரேலின் ஆக்கிமிப்புக்குஉட்பட்டிருந்தபோது அங்கிருந்த பத்து தொழிற்சலைகள் இஸ்ரேலால் அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன் சர்வதேச தன்னார்வக்குழு நிறுவனம் ஒன்றுக்கு மாத்திரமே காஸாவுக்குள் கட்டுமானப்பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

காஸாவின் மீது பெரும்போர் ஒன்றை நடத்தப்போவதாக இஸ்ரேல் அச்சுறுத்தல்.


காஸாவின் மீது மற்றுமோர் பெரும்போர் ஒன்றை நடத்தப்போவதாக இஸ்ரேலின்தலைமை இராணுவஅதிகாரி ஜெனரல் இஸ்டேப் பேனி பலஸ்தீனர்களுக்குஅச்சுறுத்தல் விடுத்துள்ளார்.பலஸ்தீனின் மீது கூடியசீக்கிரத்தில் இராணுவ டவடிக்கைள் மேற்கொள்ளப்படும்எனவும் அதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவருவதாகவும், செவ்வாய்க்கிழமை இஸ்ரேலியபராளுமன்றத்தில் இஸ்ரேலின் வெளிநாட்டுஅலுவல்கள் மற்றும் பாதுகாப்புக்குழுவினர் மத்தியில் உரையாற்றும் போது அவர் தெரிவித்ததாக இஸ்ரேலின் உள்நாட்டு ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.

Tuesday, November 15, 2011

இஸ்லாத்தை ஏற்கும் பிரித்தானிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.




பிரித்தானியாவில் புனித இஸ்லாத்தை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை கூடியளவில்அதிகரித்த வருவதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. பிரித்தானியாவில் இஸ்லாத்தைஏற்றுக்கொள்வதில் 2/3 பகுதியினர் பெண்களாவர்.கடந்த வருடம் 5200 பிரித்தானியர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.மேலும் அவர்களில் 

Monday, November 14, 2011

ரஷ்யா முஸ்லிம்கள் வீதிகளில் தமது ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள்.


ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் வசிக்கும் முஸ்லிம்கள் தமது ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகையை வீதிகளில் நிறைவேற்றியுள்ளனர். ரஷ்யாவின் மொஸ்கோ நகரில்3மில்லியன் முதல் 5மில்லியன் வரையான மக்கள் வசிக்கின்றதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் அங்கு குறைந்தளவான பள்ளிவாசல்களே காணப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான

Friday, November 4, 2011


அனபார்ந்த எனது இஸ்லாமிய உள்ளங்களுக்கு ஈதுல் அல்ஹா ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்



நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரமாக வரைந்து அடுத்தபதிப்பில் வெளியிட திட்டமிட்டிருந்த சார்லிஹப்டோ எனும் சஞ்சிகையின் தலமையகம் மீது தாக்குதல்நடாத்தப்பட்டுள்ளது. சார்லிஹப்டோ சஞ்சிகையின் அடுத்தபதிப்பில் ஆசிரியர் தலையங்கமாக நபி(ஸல்) அவர்களின் கேலிச்சித்திரம்வெளியிடப்படவிருந்தது

Thursday, October 27, 2011

டியூனிசியா தேர்தல் முடிவுகளின்படி அந்நஹ்தா இஸ்லாமியக்கட்சி முன்னிலையில்.




டியூனிசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலின் தற்போதைய நிலவரங்களின்படி அந்நஹ்தா இஸ்லாமியக் கட்சியானது முன்னனியில் உள்ளதாகசெய்திகள்தெரிவிக்கின்றன. 217ஆசனங்களுக்காக நடைபெற்ற தேர்தலில்,87ஆசனங்களுக்கான முடிவுகளை செவ்வாய்க்கிழமையன்று டியூனிசியாவின் தேர்தல்ஆணையகம் அறிவித்தது.அதன்படி அந்நஹ்தா இஸ்லாமியக் கட்சி

லெபனான் மீது மூன்றாவது போரைத்தொடுக்க இஸ்ரேல் திட்டம் .



லெபனானின் மீது மூன்றாவது தடவையாகப் பேர்தொடுக்க ஸியோனிச அரசு திட்டமிட்டுள்ளதாக லெபனானின் உள்நாட்டு செய்தித்தாபனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலானது தனது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே லெபனான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், 

சீனாவின் 400க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களில் வாசிகசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.



சீனாவின் வடமேற்குப்பகுதியின் 'இங்குசேடியா' பிரதேசத்தில் 400க்கும் அதிகமானபள்ளிவாசல்களில் வாசிகசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக சீனாவின் செய்திநிறுவனமொன்று தெரிவிக்கின்றது.விஞ்ஞானம் சார்ந்த அறிவினை மேம்படுத்தும்நோக்கிலும், விஞ்ஞானம்,கலாச்சாரம் மற்றும் சட்டம் சாந்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கும் நோக்கிலேயுமே பள்ளிவாசல்களில்

Saturday, October 1, 2011

சியாரம்: பெளத்த சாசன அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செலாளர் ஒருவர் இடமாற்றம்


வட மத்திய மாகாணமான அநுராதபுரம் பழைய நகர் பகுதியில் பெளத்த மதகுருமாரார் தலைமை தாங்கிய பெளத்த மதக் குழுவொன்றினால்  பழமையான ஸியாரம் ஒன்று உடைத்து தகர்ப்பட்டது
தொடரில் பெளத்த சாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செலாளர்களுள் ஒருவரான எம்.எஸ்.கப்புகொட்டுவ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது.

1800 விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் விடுதலை


1800 விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைக்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
வெளிநாட்டுத் தூதுவர்கள், ராஜதந்திரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மதத் தலைவர்கள், மற்றும் புனர்வாழ்வு பெற்றவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களை அவர்களின் பெற்றோர்களிடம் கையளித்து உரையாற்றிய ஜனாதிபதி:

Wednesday, September 28, 2011

பலஸ்தீனர்களுடான ஆர்பாட்டத்துக்குப் பயிற்சியளிக்கும் இஸ்ரேலியப்பெண்.


பலஸ்தீனை சுதந்திர தேசமாக்குவதற்கு அங்கீகாரம்கோரி ஐக்கியநாடுகள்சபையில்நடைபெறவுள்ளவாக்கெடுப்பைத்தொடர்ந்து,யூதக்குடியிருப்பாளர்கள்ஆர்ப்பாட்டங்களில்ஈடுபடுவதற்காக,ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு பயிற்சியளித்துவருகின்றனர்.
யூதக் குடியிருப்பாளர்களில் பெண் ஒருவர் குஸ்எட்ஸியோன் பகுதியில் உள்ள மைதானமொன்றில் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டுகின்ற இப்படங்களை இஸ்ரேலின் உள்நாட்டுப் பத்திரிகையொன்று வெளியிட்டிருந்தது. 

Tuesday, September 27, 2011

பலஸ்தீன் இப்ராஹிமிய்யா பள்ளிவாசலில் தொழுவதற்கு இஸ்ரேலியஇராணுவம் தடைசெய்துள்ளது.



பலஸ்தீனமக்களுக்கும்,இஸ்ரேலிய இராணுவத்தின் பாதுகாப்பில் செயல்படும்யூ தக்குடியிருப்பாளர்களுக்கும் நேற்று புதன்கிழமையன்று அல்-கலீல் பகுதியில்மோதல் இடம்பெற்றுள்ளது.இதனால் அப்பிரதேசத்தில் உள்ள இப்ராஹிமிய்யாப்பள்ளிவாசலில் பலஸ்தீனமக்களுக்கு தொழுவதற்கு இஸ்ரேலியஇராணுவம் 

பிரான்ஸ் தலைநகரின் வீதிகளில் தொழுவதற்கு எதிரான சட்டம் அமுலாக்கம்.!





பிரான்ஸின் தலைநகர் பரிஸின் வீதிகளில் தொழுவதற்கு எதிரானசட்டம்
கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்குவந்தது.பிரான்ஸ் அரசாங்கத்தினால் உடனநடியாக அமுலுக்குவரும்வகையில் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தினால்பிரான்ஸ் முஸ்லிம்கள்

Monday, September 19, 2011

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு


நேற்று முன்தினம் இரவு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று பாதுகாப்புச் செயலாளரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா lankamuslim.org க்கு வழங்கிய தகவலை இங்கு தருகின்றோம் .

Sunday, September 18, 2011

இந்தியா, நேபாளத்தில் நில நடுக்கம்: 19 பேர் பலி _

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமை மையமாக வைத்து நேற்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிச்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநில மக்கள் பெரும் பீதியடைந்ததுடன் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விமான விபத்து: 9 பேர் பலி, 70 பேர் காயம்


  அமெரிக்காவில் உள்ள நெவாடாவில் விமான கண்காட்சி நடந்தது. அப்போது 2ஆம் உலகப் போரில் பங்கேற்ற விமானங்களுக்கான பந்தயம் நடந்தது. அதில் ஒரு விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்தது. அதில் விமானத்தின் உடைந்த பாகங்களின் சிதறல்கள் விழுந்ததில் விமானி உள்பட பந்தயத்தை வேடிக்கை பார்த்த 9 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு


அளவ்வையில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் 25 பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில், 18 பேர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவளை இந்த விபத்து குறித்து ஆராய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலும் பொல்காவையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலும் அம்பேபுஸ்ஸ நோக்கி பயணித்த ரயிலுமே ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது.

வேண்டாம் இனவாதம்


இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான பிரசாரங்கள் திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டு வருகின்றது பல இணைதளங்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் இது தொடர்பான பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது  இது தொடர்பாக   தகவல்களையும் லங்காமுஸ்லிம்  பதிவு செய்திருந்தது.