Subscribe:

Tuesday, September 13, 2011

கென்யாவில் பெட்ரோல் குழாய் வெடித்து சிதறியது: 100 பேர் உடல் கருகி பலி

கென்யா தலைநகர் நைரோபியில் பெட்ரோல் குழாய் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் உடல் கருகி உயிரிழந்தனர்.
நைரோபியின் மையப் பகுதியில் இருந்து விமான நிலையம் வரை பெட்ரோல் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இக்குழாய் லுங்கா லுங்கா என்ற தொழிற்சாலைப் பகுதி வழியாகச் செல்கிறது.

இப்பகுதியில் சினாய் என்ற சேரிப் பகுதியும் உள்ளது. இங்கு நேற்று திடீரென பெட்ரோல் குழாய் வெடித்துத் தீப்பிடித்தது. மளமளவென தீ பல இடங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.
குழாய் வெடித்த இடத்தில் நின்றிருந்த பலர் தீயில் கருகி பலியாயினர். சினாய் பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் பெட்ரோல் குழாய் திறந்து கிடந்திருக்கிறது. அதில் இருந்து வெளியேறிய பெட்ரோலைப் பிடிக்க அக்கம் பக்கத்து மக்கள் ஆர்வத்தில் கூடியுள்ளனர்.
அப்போது அக்குழாயில் சிகரெட் நெருப்புப் பொறி ஒன்று விழுந்ததால் வெடிவிபத்து நிகழ்ந்து இந்தக் கோர சம்பவம் நடந்திருக்கிறது என முதற்கட்ட விசாரணை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுவரை 80 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் பலர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

0 comments:

Post a Comment