Subscribe:

Saturday, September 17, 2011

முதல் பத்து இடங்களில் 6 தமிழ் மொழிமுல மாணவர்கள் அதில் 3 முஸ்லிம் மாணவர்கள்


நடைபெற்று முடிந்துள்ள 2011 ஆம் ஆண்டுக்கான 5ம் ஆண்டு மாணவர்களின் புலமை பரிசில் பரீட்சையில் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை ரீதியாக முதல் 10 இடங்களுக்குரிய புள்ளிகளை 3 முஸ்லிம் மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இதன் படி கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் ஸக்கி அஹமட் நலீம் அகில இலங்கை ரீதியாக 195 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் குருநாகல் பொல்காவெல அல் அக்ஸா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் எம்.எம்.எஸ். சுல்தான் 193 புள்ளிகளைப் பெற்று 6 ஆவது இடத்தையும் நிந்தவூர் அல் அஷ்ராக் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் ஏ.ஆர்.எம். முர்ஷித் 192 புள்ளிகளைப்பெற்று 10 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்
இதேவேளை முல்லைத்தீவு விசுவமடு நெத்தலியாறு தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் சேதுராகவன் 194 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சர்வானந்தன் சர்மிளா 193 புள்ளிகளைப் பெற்று 6ஆம் இடத்தையும் யாழ்பாணம் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி ரமேஷ் நிதூர்ஷிகா 192 புள்ளிகளைப் பெற்று 10ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர் என்று செய்திகள தெரிவிக்கின்றன.
இதன் படி முதல் 10 இடங்களுக்குரிய புள்ளிகளை ஆறு தமிழ் மொழி மூல மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

0 comments:

Post a Comment