Subscribe:

Tuesday, September 13, 2011

பிரிட்டனில் சுழற்புயல்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு


பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள Katia சுழற்புயல் காரணமாக நாட்டின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
15 வருடங்களுக்கு பின்னர் பிரித்தானியாவில் ஏற்பட்ட மோசமான புயலாக இது கருதப்படுகின்றது. இப்புயல் வேல்ஸ் பகுதியில் மணிக்கு 82 மைல் வேகத்திலும், வட இங்கிலாந்தில் மணிக்கு 70 மைல் வேகத்திலும் வீசுகின்றது.

பலத்த காற்று மற்றும் புயல் மழையினால் இரு வாகனச் ஓட்டுநர்கள் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் போட்ஸ்மவுத்திலிருந்து பிரான்சிற்குச் செல்லும் அனைத்து விமானப் பயணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. லீட்ஸ் பிறட்போட் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் பாதை தவறி இறங்கின.
கம்பிரியாவிலுள்ள அலொன்பியில் 12 அடி உயரமான அலைகள் எழுந்தன. இதேவேளை மரங்கள் வீழ்ந்து போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகள் சேதமடைந்துள்ளன. 4 எச்சரிக்கை மட்டங்களில் 2ஆம் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment