Subscribe:

Wednesday, September 7, 2011

உலகின் மிகப்பெரிய உப்பு ஏரியை பாதுகாக்க ஈரான் அரசு தீவிரம்[


ஈரான் நாட்டில் உள்ள உலகின் மூன்றாவது பெரிய உப்பு ஏரியான உர்மியா ஏரியைப் பாதுகாக்க அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதாக அந்நாட்டுத் துணை அதிபர் முகமது ரெசா ரஹிமி தெரிவித்தார்.

ஈரானின் வடமேற்கு பகுதியில் உள்ளது உர்மியா ஏரி. இது உலகின் மூன்றாவது மிகப்பெரிய உப்பு ஏரியாகும். மேலும் மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள மிகப்பெரிய ஏரியும் இதுவே ஆகும். இந்த ஏரி கடந்த 20 ஆண்டுகளில் பாதியாகச் சுருங்கி விட்டது.

எனவே இந்த ஏரியை பாதுகாக்க ஈரான் அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆரஸ் ஆற்றிலிருந்து ஈரானுக்கு வரவேண்டிய நீரின் பங்கை இந்த ஏரிக்கு திருப்பிவிட ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது.
இதோடு மட்டுமின்றி ஏரியைப் பாதுகாக்க அனைத்து வழிகளையும் ஈரான் அரசு ஆராய்ந்து வருகிறது. இந்த ஏரியின் பிரதான நீர் ஆதாரமாக உள்ள ஆரஸ் ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டதாலும், வறட்சியினாலும் ஏரி பாதியாக சுருங்கிப் போய் விட்டது. ஆரஸ் ஆறு துருக்கி, ஆர்மீனியா, ஈரான், அஜர்பெய்ஜான் ஆகிய நாடுகளின் வழியாகப் பாய்கிறது.

0 comments:

Post a Comment