
இந்த அதிர்ச்சி உண்மையை யார்க் மற்றும் ஸ்டிர்லிங் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். குழந்தையின் பிரிவை தாங்க முடியாத பெற்றோர் மரணம் அடைவது 4 மடங்கு அதிகரித்துள்ளது. குழந்தை இறந்த 10 ஆண்டுகளுக்குள் அவர்களது மரணமும் நிகழ்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிரிவை தாங்க முடியாமல் இதயம் நொறுங்கி வாழ்க்கை துணைகள் உயிழப்பதாக முந்தய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கை பிரிட்டன் மெடிக்கல் இதழான சப்போர்டிவ் மற்றும் பாலேடிவ் கேர் இதழில் வெளியாகி உள்ளது.
இது குறித்து மேலும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தற்கொலை அல்லது மன அழுத்த பிரச்சனை காரணமாக இறந்தவர்கள் விவரங்களை ஆய்வு செய்த போது குழந்தை இறப்பை தாங்க முடியமால் அவர்கள் உயிரிழக்கிறார்கள் என்பது தெரியவந்தது.
0 comments:
Post a Comment