Subscribe:

Monday, September 5, 2011

கடாபியுடன் ஜேர்மன் உளவுத் துறைக்கு தொடர்பு


லிபியாவில் 42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த கர்னல் கடாபியின் ஆட்சி முடிவுற்ற நிலையில் புரட்சிப் படையினரின் இடைக்கால நிர்வாகம் நடைபெறுகிறது.
கடாபி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த நிலையில் கடாபியின் உளவுத்துறை ஜேர்மனி உளவுத்துறையுடன் தொடர்பு வைத்து இருந்தது தெரியவந்துள்ளது.
இருப்பினும் ஜேர்மனி உளவுத்துறை விடயத்தில் லிபியாவுடன் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டது இல்லை என ஜேர்மனியின் முன்னாள் உளவுத்துறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் இணையமைச்சரான பெர்ன்ட் சிமிட்பவுர் தெரிவிக்கிறார்.
இவர் 1991ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை இவர் பதவியில் இருந்தவர். லிபியாவில் உளவுத்துறை ஆவணங்களை ஆய்வு செய்த போது ஜேர்மனி கடாபி உளவுத்துறையுடன் தொடர்பு வைத்து இருந்தது தெரியவந்தது.
லிபியா புரட்சி படையினரின் புதிய ஜேர்மனி தூதராக அலி மாசேட்னா அல்-கோதனி நியமிக்கப்பட்டு உள்ளார். மேற்கத்திய அரசுகளுக்கும் கடாபி நிர்வாகத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அறிய அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment