Subscribe:

Saturday, September 17, 2011

சிர்தேவில் கடாபி ஆதரவாளர்களுடன் புரட்சிப்படையினர் மோதல்

லிபியாவில் 42 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த கர்னல் கடாபியின் ஆட்சி அகற்றப்பட்டு விட்டது.
தற்போது கடாபியின் சொந்த இடமான சிர்தே நகரில் அவரது ஆதரவாளர்கள் புரட்சிப் படையை எதிர்த்து வருகிறார்கள். இந்த எதிர்ப்பை மீறி புரட்சிப் படையினர் முன்னேறி வருகிறார்கள்.

சிர்தேவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் காணப்பட்ட கடுமையான தடையை மீறி புரட்சி படையினர் முன்னேறி வருகிறார்கள். இதே போன்று மிஸ்ரட்டா நகரில் கடாபி ஆதரவாளர்களுக்கும், புரட்சிப் படையினருக்கும் கடுமையான மோதல் நீடித்து வருகிறது.
இந்த மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். 34 பேர் காயமடைந்தனர் என்று மிஸ்ரட்டா ராணுவ கவுன்சில் தெரிவித்தது. மிஸ்ரட்டா நகரம் தலைநகரிலிருந்து மேற்கு பகுதியில் 200 கி.மீ. தொலைவில்(120மைல்) உள்ள பகுதியாகும்.
இதற்கிடையே கர்னல் கடாபியின் செய்தி தொடர்பாளர் மூசா இப்ராகிம் சிரியா நாட்டு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். இடைக்கால நிர்வாகத்தின் பிடியிலிருந்து லிபியாவை விடுவிப்போம். பல்வேறு நிலைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராடுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று அந்த பேட்டியில் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment