Subscribe:

Wednesday, September 7, 2011

அல் குர்ஆனை அரசியல் களத்தில் தவறாக பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும்


இஸ்லாமிய அரசியல் என்பது அராஜகம் , பயங்கரவாதம் , இனவாதம் , துவேசம் , சிறு பான்மை ஒடுக்கு முறை போன்ற அணைத்து மனித விரோத உணர்வுகளுக்கும் நேர் எதிரானது அல் குர்ஆன் போதிக்கும் அரசியல் , பொருளாதார , சமுகவியல் , போரியல் கோட்பாடுகள் மனிதனையும் இறைவனையும் மிகவும் நெருக்கமாக தொடர்பு படுத்தி நிற்பவை அது போதிக்கும் நீதி என்றும் நிலையானது சொந்த இலாபங்களுக்காக ,தான் சார்ந்த கட்சியின் ஆட்களுக்காக , பச்சை , நீளம் , சிகப்பு  என்ற நிரங்களுக்காக அதன் நீதி சாய்ந்து விடாது , இஸ்லாமிய அரசின்  தலைவர் கலீபா குற்றம் செய்தால் அவரும் தண்டிக்கபடுவார் இஸ்லாமிய அரசியல் ஒவ்வோர் தனி மனிதனின் உரிமைகளையும் மிகவும் நுட்பமாக பாதுகாக்கும் தன்மை கொண்டது இதை தான் இஸ்லாமிய இரண்டாவது அரசியல் தலைவர் கலீபா உமர் இப்படி கூறினார் ” எனது ஆட்சியில் .. கடற்கரை .. ஒன்றில் ஒரு நாய் இறந்தாலும் அதற்கும் நான் ..பொறுப்பு  சொல்லவேண்டும் என்றார் ” இவை வெறும் வார்த்தைகள் அல்ல உலகை ஆண்ட நடைமுறை அரசியல் .    தனி நபர் சுதந்திரத்துக்காக சமூகத்தையோ , சமுகத்தின் சுதந்திரத்துக்காக தனி நபரையோ இஸ்லாமிய அரசியலில் பலி இடமுடியாது இந்த அரசியல் முற்றிலும் நடைமுறை சார்ந்தது இந்த  உண்மையான நடைமுறை பண்புகளை கொண்ட அரசியல் யாப்புதான்   அல் குர்ஆன் இதை எந்த அரசியல் கட்சி தவறாக பயன் படுத்த முற்பட்டாலும் அது மிக பெரிய  குற்றமாகத்தான் அமையும்.
உதாரணமாக கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி போகும் பஸ் நாங்கள் லண்டன்  போகின்றோம்  லண்டன்  போகும் பிரயாணிகள் பஸ்ஸில் ஏறி கொள்ளுங்கள் என்று கூறுவதற்கு ஒப்பானதுதான் நமது நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அல் குர்ஆனை பயன்படுத்துவது இந்த புதிய முறையற்ற  பலக்கம் முற்றாக தவிர்க்க  வேண்டும்   முழு மனித சமூகத்துக்குமான விடிவு இஸ்லாம் கூறும் அரசியலில் மட்டும்தான் நடைமுறையில் இருக்கும் இஸ்லாம் கூறும் அரசியல் மனிதனை அணைத்து அடிமைத்தனத்தில் இருந்தும்  விடுதலை செய்து  பிரபஞ்சங்களின் இறைவனுக்கு மட்டும் கட்டுப்படும் மனிதனாக மாற்றும் தன்மை கொண்டது

0 comments:

Post a Comment