
இதை தொடர்ந்து ஐ,நாவின் அறிக்கையைக்கு பின்னரும் இஸ்ரேல் மன்னிப்பு கேட்காததாலும் இறந்தவர்களுக்கு, காயம் அடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்க மறுப்பதாலும் காஸா மீதான முற்றுகையை நீக்க மறுப்பு தெரிவித்து வருவதாலும் துருக்கி இஸ்ரேலின் தூதர், முக்கிய இஸ்ரேல் அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதோடு இராணுவ ஒப்பந்தங்களை இடை நிறுத்தியுள்ளது
“இரண்டாம் செயலாளர் அந்தஸ்துக்கு மேலுள்ள அனைத்து இஸ்ரேல் அதிகாரிகளும் புதன்கிழமைக்குள் துருக்கியை விட்டு வெளியேற்றப்படுவார்கள்” என்று துருக்கி வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் தவுடோக்லு கூறியுள்ளார் அதேவேளை அந்த அறிக்கையில் காஸா பகுதிக்குள் யாரும் செல்ல முடியாமல் மூடியுள்ள இஸ்ரேலின் செயலைச் சரியானது என கூறியுள்ள ஐ,நாவின் கூற்றைத் தாம் ஏற்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். “அதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் இப்பிரச்னை எழுப்பப்படும்” என்றும் கூறியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
0 comments:
Post a Comment