Subscribe:

Thursday, September 15, 2011

துருக்கி இஸ்ரேலியர்களை வெளியேற்றுகின்றது


 கடந்த ஆண்டு காஸாவுக்கு நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 9 துருக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். இரு இலங்கை முஸ்லிம்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர் இது தொடர்பாக துருக்கியின் அழுத்தினால் ஐ.நா குழு விசாரணை நடத்திவந்தது . அந்த விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது அவ்வறிக்கையில் இஸ்ரேல் இராணுவ பலத்தைத் தேவையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ஐ,நாவின் அறிக்கையைக்கு பின்னரும் இஸ்ரேல் மன்னிப்பு கேட்காததாலும் இறந்தவர்களுக்கு, காயம் அடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்க மறுப்பதாலும் காஸா மீதான முற்றுகையை நீக்க மறுப்பு தெரிவித்து வருவதாலும் துருக்கி இஸ்ரேலின் தூதர், முக்கிய இஸ்ரேல் அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதோடு இராணுவ ஒப்பந்தங்களை இடை நிறுத்தியுள்ளது
“இரண்டாம் செயலாளர் அந்தஸ்துக்கு மேலுள்ள அனைத்து இஸ்ரேல் அதிகாரிகளும் புதன்கிழமைக்குள் துருக்கியை விட்டு வெளியேற்றப்படுவார்கள்” என்று துருக்கி வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் தவுடோக்லு கூறியுள்ளார் அதேவேளை அந்த அறிக்கையில் காஸா பகுதிக்குள் யாரும் செல்ல முடியாமல் மூடியுள்ள இஸ்ரேலின் செயலைச் சரியானது என கூறியுள்ள ஐ,நாவின் கூற்றைத் தாம் ஏற்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். “அதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் இப்பிரச்னை எழுப்பப்படும்” என்றும் கூறியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

0 comments:

Post a Comment