Subscribe:

Tuesday, September 13, 2011

ஈரானில் போதைப் பொருள் கடத்திய 5 நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

ஈரானில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக குற்றசாட்டப்பட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சீம்னான் மாகாணத்தில், ஷகரோத் என்ற இடத்தில் சிறைச் சாலை ஒன்று உள்ளது. இங்கு கைதிகளாக இருந்த 5 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முடிந்திருந்தது. 5 பேரின் பெயர், வயது உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அதைபோல சிறுமி ஒருவரை கொலை செய்த வழக்கில் கைதான குஷா என்பவரை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரான் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போலி மருந்து விற்பனை, விபசாரம், கள்ளத் தொடர்பு ஆகிய குற்றங்களை கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இதனால் இந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
கடந்த 9 நாட்களில் மட்டும் 22 பேரை ஈரான் அரசு தூக்கில் போட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலரும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட காத்திருப்பதாக தெரிகிறது.
கடந்தாண்டு இதேபோல 179 பேருக்கும், இந்தாண்டு இதுவரை 192 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு இருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment