Subscribe:

Sunday, September 4, 2011

கடாபியின் ரகசிய ஆவணங்கள் ஆய்வு


லிபியாவில் இருந்து தப்பி ஓடிய கடாபியும், அவரது ஆதரவாளர்களும் தப்பி ஓடும் அவசரத்தில் தங்களது ரகசிய ஆவணங்களை விட்டுச் சென்று உள்ளனர்.
இந்த ஆவணங்கள் பல ஆண்டுகளாக யாரும் நெருங்க முடியாத நிலையில் பயங்கர பாதுகாப்புடன் இருந்தன. தற்போது இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்த ஆவணங்கள் தலைநகர் திரிபோலியில் ராணுவ புலனாய்வு மையம் உள்ள கட்டிடத்தில் இருந்தன. இந்த வளாகத்தில் ஒரு கட்டிடம் நேட்டோ வான்வழித் தாக்குதலில் நொறுங்கியது.
இதர கட்டிடங்கள் சேதம் அடையாமல் இருந்தன. இதில் கடாபியின் அடக்குமுறை ஆட்சி தெரியவந்தது. அதில் எழுதப்பட்டு இருக்கும் எழுத்துக்கள் படிப்பதற்கு சிரமமாக இருந்தது. சில ஆவணங்கள் குறிப்பிட்ட நபர்களை அழிப்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அலுவலக நிர்வாகம் அப்துல்லா அல் செனுசிக்கு உரியதாகும். இவர் கடாபியின் மைத்துனர் ஆவார். இவர் மனித இனத்திற்கு எதிராக கொடுமை செய்தவர். இவரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தேடுகிறது.
சில ஆவணங்களில் சில அரசியல் தலைவர்களை குறிப்பிட்டு "அலையும் நாய்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. கடாபி சொத்துக்கள் மற்றும் நண்பர்கள் விவரமும் உள்ளன. தலைநகர் திரிபோலியில் 1996ம் ஆண்டு அபு சலிம் சிறையில் 1200 அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட விவரமும் உள்ளது.



0 comments:

Post a Comment