Subscribe:

Monday, September 12, 2011

எகிப்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் விருப்பம்

இஸ்ரேல் தூதரகம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ளது. இந்த தூதரகத்தை கிளர்ச்சியாளர்கள் தாக்கினர்.
தங்கள் நாட்டு தூதரகம் தாக்கப்பட்டாலும் எகிப்துடன் அமைதி பேச்சு நடத்துவதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது என அந்நாட்டு பிரதமர் நெடன்யகு தெரிவித்தார்.
எகிப்தில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு கடுமையாக போராடுகிறார்கள். மூன்று பேர் உயிரிழந்து பதட்டம் அதிகரித்துள்ளது.
பாலஸ்தீனம் காசா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வன்முறை தாக்குதலின் தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கு எதிராக இந்த தாக்குதல் நடைபெறுகிறது.

இஸ்ரேல் தூதரகம் மீதான தாக்குதலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
எகிப்தில் உள்ள அனைத்து அயல்நாட்டு தூதரகங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் எகிப்து அரசை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
எகிப்தில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் வெள்ளிக்கிழமை முதல் கிளர்ச்சி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment