Subscribe:

Monday, September 5, 2011

முபாரக்கிற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று துவக்கம்



எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் மீதான முறைகேடு மற்றும் போராட்டக்காரர்களை கொன்று குவித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை இன்று தலைநகர் கெய்ரோவில் துவங்கியது.
இந்த விசாரணையில் உயர் பொலிஸ் அதிகாரி மற்றும் 3 அதிகாரிகள் வாக்குமூலம் அளிக்கிறார்கள். 83 வயது முன்னாள் ஜனாதிபதி முபாரக் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

அவரால் எழுந்து வரமுடியாத நிலையில் அவர் மருத்துவமனை படுக்கையுடன் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தார். அந்த காட்சியை பார்த்து எகிப்து நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அடுத்த விசாரணைகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நீதிபதி தடை விதித்தார்.
முபாரக் மீதான வழக்குகளில் வாக்குமூலம் அளிக்கும் போது கமெராக்கள் பயன்படுத்தக்கூடாது. இது வழக்கை பாதிக்கும் என நீதிபதி அறிவித்தார். இதனை வழக்கறிஞர்கள் வரவேற்றனர்.
வாக்குமூலம் அளிக்கும் நபர்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் சிலரால் ஆதிக்கம் செலுத்தப்படும் அபாயம் உள்ளது. எனவே தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு நீதிபதி தடை விதித்தார்.
முபாரக்கிற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது 850 போராட்டக்காரர்களை கொன்று குவித்தது தொடர்பாக பெரும் கொலை குற்றச்சாட்டு உள்ளது.

0 comments:

Post a Comment