Subscribe:

Monday, September 12, 2011

தான்சானியாவில் படகு விபத்து: 345 பேர் பலி

தான்சானியா நாட்டில் நடைபெற்ற படகு விபத்தில் சுமார் 345 பேர் இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
தான்சானியாவில் உள்ள ஜான்சிபார் என்னும் இடத்தில் இருந்து பெம்பா தீவிற்கு சென்ற படகில் சுமார் 600 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கி அனைவரும் நீரில் தத்தளித்தனர். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் 250 பேரை காப்பாற்றினர்.
விபத்து குறித்த காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment